Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2655 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2655பெரிய திருவந்தாதி || 71
இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
முகத்தான்நின் உந்தி முதல்.
தனி நின்ற, Thani Nindra - தானொருவனுமே காரணமாய் நின்றவனும் (- (என்னால் சொல்லப்போகாதென்கை))
சார்வு இலா, Saarvu Ilaa - வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான
மூர்த்தி, Moorthy - எம்பெருமானே!
அகத்து பனி நீர் உலவு செம்சடையான், Agathu Pani Neer Uhlavu Semchadayan - உள்ளே குளிர்ந்த சங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன்.
ஆகத்தான், Aagaththaan - உன் திருமேனியை அச்ரயித்து வாழ்பவன்;
நான்கு முகத்தான், Naanthu Mugaththaan - நான்முகக் கடவுள்
நின் உந்தி முதல், Nin Undhi Mudhal - உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்;
இனி, Ini - இப்படியான பின்பு
நின் பெருமை, Nin Perumai - உனது மேன்மையை
யான் நின்று உரைப்பது என்னே, Yaan Nindru Uraippathu Ennae - தான் முயன்று சொல்வது எங்ஙனே?