| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2655 | பெரிய திருவந்தாதி || 71 | இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே, தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர் அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு முகத்தான்நின் உந்தி முதல். | தனி நின்ற, Thani Nindra - தானொருவனுமே காரணமாய் நின்றவனும் (- (என்னால் சொல்லப்போகாதென்கை)) சார்வு இலா, Saarvu Ilaa - வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான மூர்த்தி, Moorthy - எம்பெருமானே! அகத்து பனி நீர் உலவு செம்சடையான், Agathu Pani Neer Uhlavu Semchadayan - உள்ளே குளிர்ந்த சங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன். ஆகத்தான், Aagaththaan - உன் திருமேனியை அச்ரயித்து வாழ்பவன்; நான்கு முகத்தான், Naanthu Mugaththaan - நான்முகக் கடவுள் நின் உந்தி முதல், Nin Undhi Mudhal - உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்; இனி, Ini - இப்படியான பின்பு நின் பெருமை, Nin Perumai - உனது மேன்மையை யான் நின்று உரைப்பது என்னே, Yaan Nindru Uraippathu Ennae - தான் முயன்று சொல்வது எங்ஙனே? |