| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2614 | பெரிய திருவந்தாதி || 30 | இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண் டடியெடுப்ப தன்றோ அழகு? | இங்கு, Inku - என்னுடைய இந்த நெஞ்சில் பண்டுபோல், Pandupol - இத்தனை நாளும் போலே என்னுடைய செம் கண் மால், Ennudaiya Sem Kan Maal - என்மேல் வாத்ஸல்யத்தாலே வெந்த திருக்கண்களையுடையனான பெருமானுடைய சீர்க்கும், Seerkum - கல்யாண குணங்களுக்கே உள்ளம் சிறிது, Ullam Siridhu - எனது நெஞ்சு இடம்போராத தாயிருக்கின்றது. அங்கே, Ange - முன்பு விசாலமாக வாழ்ந்தவிடத்திலே வீற்றிருத்தல் இல்லை, Veetiruththal Illai - (பாவங்கள் இனி) தங்கியிருக்க முடியாது (ஏனென்றால்) வல்வினையார் தாம், Valvinaiyaar Thaam - கொடிய பாவங்கள் மடி அடக்கி நிற்பதனில், Madi Adakki Nirpadanil - துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதைவிட ஈண்டு, Eendu - இவ்விடத்தில் நின்றும். அடி எடுப்பது அன்றோ அழகு, Adi Eduppadhu Andro Azhagu - கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது. |