Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2614 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2614பெரிய திருவந்தாதி || 30
இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண்
டடியெடுப்ப தன்றோ அழகு?
இங்கு, Inku - என்னுடைய இந்த நெஞ்சில்
பண்டுபோல், Pandupol - இத்தனை நாளும் போலே
என்னுடைய செம் கண் மால், Ennudaiya Sem Kan Maal - என்மேல் வாத்ஸல்யத்தாலே வெந்த திருக்கண்களையுடையனான பெருமானுடைய
சீர்க்கும், Seerkum - கல்யாண குணங்களுக்கே
உள்ளம் சிறிது, Ullam Siridhu - எனது நெஞ்சு இடம்போராத தாயிருக்கின்றது.
அங்கே, Ange - முன்பு விசாலமாக வாழ்ந்தவிடத்திலே
வீற்றிருத்தல் இல்லை, Veetiruththal Illai - (பாவங்கள் இனி) தங்கியிருக்க முடியாது (ஏனென்றால்)
வல்வினையார் தாம், Valvinaiyaar Thaam - கொடிய பாவங்கள்
மடி அடக்கி நிற்பதனில், Madi Adakki Nirpadanil - துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதைவிட
ஈண்டு, Eendu - இவ்விடத்தில் நின்றும்.
அடி எடுப்பது அன்றோ அழகு, Adi Eduppadhu Andro Azhagu - கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது.