| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2626 | பெரிய திருவந்தாதி || 42 | பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன்படைத்தா னென்பரால்,- பாரிடம் ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு ஆவான் பூகாவால் அவை. | பார் உண்டான், Paar Undhaan - (பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்; (- (ஸ்ரீமந் நாராயணனே)) பார் இடந்தான், Paar Idandhaan - (மஹாவரடாநஹமாகிப்) பூமியை ஒட்டுவிடுவித்தெடுத்தான்; பார் அளந்தான், Paar Alandhaan - (திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்; முன், Mun - முதல்முதலாக பார் இடம் படைத்தான், Paar Idam Padaiththaan - இப்பூமியை யெல்லாம் உண்டாக்கினான் என்பர், Enbar - என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்; பார் உமிழ்ந்தான், Paar Umizhndhaan - (பிறகு) அதைப் புறப்படவிட்டான்; பார் இடம் ஆவானும் தான், Paar Idam Aavaanum Thaan - அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வரீபியாகவுமிருக்கிறான்; ஆனால், Aanaal - ஆனபின்பு (நமக்கு) இடம் ஆர், Idam Aar - ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை) அவை, Avai - இவ்வுலகங்கள் மற்று ஒருவர்க்கு, Mattru Oruvarkku - ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு ஆவான் புகா, Aavaan Pugaa - சேஷப்பட்டிருக்க மாட்டா. |