திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2626 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2626பெரிய திருவந்தாதி || 42
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன்படைத்தா னென்பரால்,- பாரிடம் ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு ஆவான் பூகாவால் அவை.
பதவுரை Show / Hide
பார் உண்டான், Paar Undhaan - (பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்; (- (ஸ்ரீமந் நாராயணனே))
பார் இடந்தான், Paar Idandhaan - (மஹாவரடாநஹமாகிப்) பூமியை ஒட்டுவிடுவித்தெடுத்தான்;
பார் அளந்தான், Paar Alandhaan - (திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்;
முன், Mun - முதல்முதலாக
பார் இடம் படைத்தான், Paar Idam Padaiththaan - இப்பூமியை யெல்லாம் உண்டாக்கினான்
என்பர், Enbar - என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்;
பார் உமிழ்ந்தான், Paar Umizhndhaan - (பிறகு) அதைப் புறப்படவிட்டான்;
பார் இடம் ஆவானும் தான், Paar Idam Aavaanum Thaan - அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வரீபியாகவுமிருக்கிறான்;
ஆனால், Aanaal - ஆனபின்பு (நமக்கு)
இடம் ஆர், Idam Aar - ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை)
அவை, Avai - இவ்வுலகங்கள்
மற்று ஒருவர்க்கு, Mattru Oruvarkku - ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு
ஆவான் புகா, Aavaan Pugaa - சேஷப்பட்டிருக்க மாட்டா.