திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 867 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
867ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 116
மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன் கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே
பதவுரை Show / Hide
மாறு செய்த, Maaru Seitha - எதிரிட்ட
வாள் அரசர்கள், Vaal Arasarkal - ஆயுதபாணியான இராவணனுடைய
நாள் உவப்ப, Naal Uvappa - வாழ்நாள் முடியும்படியாக
அன்று, Andru - முற்காலத்து
இலங்கை, Ilankai - லங்காபுரியை
சென்று, Sendru - அடைந்து
நீறு செய்து, Neeru Seidhu - நீறாக்கி
கொன்று, Konru - அவனைக் கொன்று
வெற்றி கெணண்ட, Vettri Kenanda - ஜயம்பெற்ற
வீரனார், Veeranaar - மஹாவீரரான பெருமாள்
என்னை, Ennai - அடியேனை
தம்முள் வேறு  செய்து வைத்திடாமையால், Thammul Veru Seidhu Vaithidamaiyaal - தம்மில் வேறுபடுத்தி வைக்காமையினால் (என்னை அந்தரங்க பூதனாகக் கொண்டருளினபடியால் ) (இனி)
நமன், Naman - யமனானவன்
கூறுசெய்து கொண்டு, Koora Seidhu Kondu - (என்னை அம்பெருமானிடத்தினின்றும்) பிரித்து
இறந்த குற்றம், Iranda Kutram - நான் செய்து கழித்த பாவங்களை
என்ன வல்லனே, Enna Vallanai - நெஞ்சாலும் நினைக்கக் கடவனோ.