திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 847 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
847ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 96
வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய் வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே
பதவுரை Show / Hide
வரம்பு இலாத மாய, Varambu Iladha Maaya - அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே
மாய!, Maaya - ஆச்சரியசக்தியுக்தனே!
வையம் எழும், Vaiyam Ezhum - ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி)
மெய்ம்மையே, Meimmaiye - மெய்யாகவே
வரம்பு இல் ஊழி, Varambu Il Oozhi - பலபல கற்பகங்கள் வரையிலும்
ஏத்திலும், Aeththilum - தோத்திரம் பண்ணினாலும்
வரம்பு இலாத கீர்த்தியாய், Varambu Ilaadha Keerthiyaai - எல்லைகாண முடியாத புகழையுடையோனே!
புண்டரீகனே, Pundareekane - புண்டரீகாக்ஷனே! (அடியேன்)
வரம்பு இலாயா, Varambu Ilaayaa - முடிவில்லாமல் நேரக்கூடியவனான
பல் பிறப்பு, Pal Pirappu - பற்பல ஜன்மங்களை
அறுத்து, Aruththu - இன்றோடு முடித்துவிட்டு
நின் கழல் வந்து, Nin Kazhal Vandu - உனது திருவடிகளைக் கிட்டி
பொருந்தும் ஆ, Porundum Aa - அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி
திருந்த, Thirundha - நன்றாக
நீ வரம் செய், Nee Varam Sei - அநுக்ரஹித்தருள வேணும்