திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 844 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
844ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 93
சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே
பதவுரை Show / Hide
கரும்பு இருந்த கட்டியே, Karumbu Irundha Kattiye - கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே!
கடல் கிடந்த கண்ணனே, Kadal Kidandha Kannane - திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே!
இரும்பு, Irumbu - இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள்
அரங்க, Aranga - அழியும்படி
வெம்சரம், Vemsaram - தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த, Durandha - பிரயோகித்த
வில், Vil - ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே!
இராமனே, Iramane - இராமபிரானே!
அரங்கம் வாணனே, Arangam Vaanane - கோயிலில் வாழ்பவனே
கரும்பு, Karumbu - வண்டுகளானவை
அரங்கு, Arangu - படிந்திருக்கபெற்ற
தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய்
துதைத்து, Thuthaithu - நெருங்கி
அலர்ந்த, Alarntha - விசுஸித்திருக்கப்பெற்ற
பாதமே, Paadame - (உனது) திருவடிகளையே
விரும்பி நின்று, Virumbi Nindru - ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு
இறைஞ்சு வேற்கு, Irainthu Vearku - தொழுகின்ற அடியேன் பக்கல்
இரங்கு, Irangu - க்ருபைபண்ணியருள்.