திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 844 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 93 | சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே | பதவுரை Show / Hideகரும்பு இருந்த கட்டியே, Karumbu Irundha Kattiye - கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே! கடல் கிடந்த கண்ணனே, Kadal Kidandha Kannane - திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே! இரும்பு, Irumbu - இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள் அரங்க, Aranga - அழியும்படி வெம்சரம், Vemsaram - தீக்ஷ்ணமான அம்புகளை துரந்த, Durandha - பிரயோகித்த வில், Vil - ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே! இராமனே, Iramane - இராமபிரானே! அரங்கம் வாணனே, Arangam Vaanane - கோயிலில் வாழ்பவனே கரும்பு, Karumbu - வண்டுகளானவை அரங்கு, Arangu - படிந்திருக்கபெற்ற தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் துதைத்து, Thuthaithu - நெருங்கி அலர்ந்த, Alarntha - விசுஸித்திருக்கப்பெற்ற பாதமே, Paadame - (உனது) திருவடிகளையே விரும்பி நின்று, Virumbi Nindru - ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு இறைஞ்சு வேற்கு, Irainthu Vearku - தொழுகின்ற அடியேன் பக்கல் இரங்கு, Irangu - க்ருபைபண்ணியருள். |