திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 814 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
814ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 63
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும் நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே
பதவுரை Show / Hide
நன்று இருந்து, Nandru Irundhu - (யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து
யோகம் நீதி, Yogam Neethi - யோகமாகியு உபாயத்தை
நண்ணுவார்கள், Nannuvargal - ஸாதிக்கின்ற யோகிகளுடைய
சிந்தையுள், Sindhaiyul - ஹ்ருதயத்தினுள்ளே
சென்று இருந்து, Senru Irundhu - ப்ரவேசித்திருந்து
ஊரகத்தும், Ooragaththum - திருவூரகத்திலும்
வெஃகனை, Veghkanai - திருவெஃகாவிலும்
தீ வினைகள் தீர்த்த, Thee Vinaigal Theertha - (அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின
தேவ தேவனே!, Deva Devaney - தேவாதி தேவனே!
குன்று இருந்த நீடு மாடம், Kundru Irundha Needu Maadam - மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய
பாடகத்தும், Paadakaththum - திருப்பாடகத்திலும்
இருந்து நின்று கிடந்தது, Irundhu Nindru Kidandhadhu - (க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது
என்ன நீர்மை, Enna Neermai - என்ன ஸௌஹார்த்தமோ!