திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 807 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
807ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 56
இலங்கை மன்னன் ஐந் தொடு ஐந்து பைந்தலை நிலத் துகக் கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார் வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற்காலத்தில்
இலங்கை மன்னன், Ilankai Mannan - இராவணனுடைய
ஐந்தொடு ஐந்து, Aindodu Aindhu - பத்தாகிய
பை தலை, Pai Thalai - வலிய தலைகள்
நீலத்து உலக, Neelathu Ulaga - பூமியிலே விழுந்தொழியவும்
கலங்க, Kalanga - (அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும்
சென்று, Sendru - இலங்கையிற் புகுந்து
கொன்று, Konru - (அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து
வென்றி கொண்ட, Vendri Konda - விஜயம் பெற்ற
வீரனே, Veerane - மஹாவீரனே!
விலக்கு நூலர், Vilakku Noolar - உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும்
வேதம் நாவர், Vedham Navar - வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும்
நீதி ஆன கேள்வி யார், Neethi Aana Kelpvi Yaar - (நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள்.
வலம் கொள, Valam Kola - வழிபாடுகள் செய்யும்படியாக
குடந்தையுள், Kudandhaiyul - திருக்குடந்தையிலே
கிடந்த, Kidandha - திருக்கண் வளர்ந்தருளா நின்ற
மாலும் அல்லையே, Maalum Allaiye - ஸர்வேச்வரனும் நீயன்றோ