திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 795 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
795ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 44
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம் போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாம் மாலின் நீர்மை வையகம் மறைத்ததென்ன நீர்மையே
பதவுரை Show / Hide
பாலின் நீர்மை, Paalin Neermai - பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
செம்பொன் நீர்மை, Sembon Neermai - சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன
பாசியின் பசும்புறம் போலும் நீர்மை, Paasiyin Pasumpuram Polum Neermai - பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன
பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் நீலம் நீர்மை, Porpu Uday Thadathu Vandu Vindu Ulaam Neelam Neermai - அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன.
என்று இவை நிறைந்த, Endru Ivai Niraintha - என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற
காலம் நான்கும் ஆம் மாவின் நீர்மை, Kaalam Naankum Aam Maavin Neermai - நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை
வையகம், Vaiyagam - இவ்வுலகத்திலுள்ளவர்கள்
மறைத்தது, Maraiththathu - திரஸ்கரித்தது
என்ன நீர்மை, Enna Neermai - என்ன ஸ்வபாவம்!