திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 791 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
791ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 40
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே
பதவுரை Show / Hide
ஆனை காத்து, Aanaik Kaathu - கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி
அது அன்றி, Adhu Andri - அவ்வளவேயல்லாமல்
ஆயர்பிள்ளை ஆய், Aayirpillai Aay - கோபாலகுமாரனாகி
ஓர் ஆனை கொன்று, Oru Aanaik Konru - குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று
ஆனை, Aanaik - பசுக்களை
மேய்த்தி, Meiythi - மேய்த்தருளா நின்றாய்;
ஆ நெய், A Ney - பசுக்களின் நெய்யை.
உண்டி, Undi - அமுது செய்யா நின்றாய்;
அன்று, Andru - இந்திரன் விடாமழை பெய்வித்தகாலத்தில்
குன்றம் ஒன்றினால், Kunram Ondrinaal - கோவர்த்தநமென்ற ஒரு மலையைக் கொண்டு
ஆனைக் காட்டு, Aanaik Kaatu - பசுக்களை ரக்ஷித்து
மை அரி கண் மாதரார் திறந்து, Mai Ari Kan Matharaar Thirandhu - மையணிந்து செவ்வரி படர்ந்த கண்ணையுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக
அன்று, Andru - அக்காலத்திலே
முன்சென்று, Munsendru - அவளெதிரே நின்று
என்ன மரயம், Enna Marayam - என்ன ஆச்சரியம்!