திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 783 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
783ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 32
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே
பதவுரை Show / Hide
குரங்கு இனம் படைகொடு, Kurangu Inam Padaikodu - வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு
குரை கடலின் மீது போய், Kurai Kadalin Meedhu Poi - கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி
அங்கு, Angu - அவ்விலங்கையிலுள்ள
அரக்கர், Arakkar - ராவணாதி ராக்ஷஸர்கள்
அரங்க, Aranga - அழியும்படி
வெம் சரம், Vem Saram - தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த, Durandha - அவர்கள் மேல் பிரயோகித்த
ஆதி, Ati - வீரர்களில் தலைவன்
நீ, Ni - (எம்பெருமானே;) நீயே காண்க;
இரக்க, Irakka - நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க
மண்கொடுத்தவற்கு, Mankoduththavarku - உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு
இருக்க, Irukka - குடியிருப்பதற்கு
ஒன்றும் இன்றியே, Ondrum Indriye - ஒருசாண்நிலமும் மிகாதபடி
பரக்க வைத்து, Parakka Vaiththu - (திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து
அளந்து கொண்ட, Alandhu Konda - (மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட
பற்பபரதன் அல்லையே, Parappabharathan Allaiye - தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண்.