திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 778 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
778ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 27
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே
பதவுரை Show / Hide
விண் கடந்த சோதியாய், Vin Kadandha Sothiyai - விபுவான மூலப்ரக்ருதி உனக்குள்ளேயாம்படி அதனை அதிக்ரமித்த ஸ்வாம்ப்ரகாசனே!
விளங்கு, Vilangu - ஸ்வயம்ப்ரகாசனான
ஞானம், Gnanam - ஜீவாத்மாவை
மூர்த்தியாய், Moorthiyai - சரீரமாக வுடையவனே!
பண்கடந்த தேசம் மேவு, Pankadandha Desam Mevu - வேதங்களாலும் அளவிட முடியாத பரமபதத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய்
பாவநாச நாதனே!, Pavanasa Nadane - ஹேயப்ரத்யநீகனான ஸர்வேச்வரனே!
எண் கடந்த யோகினோடு, En Kadandha Yoginodu - எண்ணமுடியாத ஆச்சர்ய சக்தியோடு கூடினவனாய்க் கொண்டு
மாணி ஆய், Maani Aay - வாமனாய்
இரந்து சென்று, Irandhu Sendru - (மூவடிமண் வேணுமென்று) யாசித்துச் சென்று
மண் கடந்த வண்ணம், Man Kadandha Vannam - பூமியை யளந்துகொண்ட விதத்தையும்
நின்னை, Ninnai - உன்னையும்
ஆர் மதிக்க வல்லர், Aar Mathikka Vallar - அளவிடக்கூடியவர்கள் யார்?