திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 777 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 26 | ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப்
பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே | பதவுரை Show / Hideஆணினோடு பெண்ணும் ஆகி, Aaninodu Pennum Aagi - புருஷஜாதி, ஸ்த்ரீஜாதி என்ற இரண்டு சாதிக்கும் ப்ரவர்த்தகனாய் அல்லவோடு நல்ல ஆய், Allavodu Nalla Aay - மேற்சொன்ன இரண்டு ஜாதியிலும் சேராத நபும்ஸக பதார்த்தங்களென்ன இம்மூன்று வகுபபிலும் சிறந்தவையென்ன இவற்றுக்கெல்லாம் நிர்வாஹகனாய் ஊணொடு ஓசை கூறும் ஆகி, Oonodu Osai Koorum Aagi - ரஸம், சப்தம், ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நியாமகனாய் என்று அலாத மாயை ஆய், Endru Aladha Maayai Aay - உலகிலுள்ள எல்லாப் பொருளாகவும் பரிணமிக்கின்ற ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனாய் பூணி பேணும், Pooni Paenum - பசுக்களை மேய்கிக்கிற ஆயன் ஆகி, Aayan Aagi - இடையனாய் பொய்யினோடு மெய்யும் ஆய், Poyyinodu Meyyum Aay - பொய்யரான துர்யோதநரதிகன் பக்கலிலே பொய்யனாய் மெய்யரான பாண்டவர் பக்கலிலே மெய்யனாய் காணிப்பேணும் மாணி ஆய், Kaanippeanum Maani Aay - (மூவடி) நிலத்தை ஆசைப்பட்ட பிரமசாரியாகி கரந்து சென்ற கள்வனே!, Karandhu Senra Kalvane - (மஹாபலியின் யாக பூமியிலே) க்ருத்ரிமமாக எழுந்தருளின் மாயனே! உன்னை யார் மதிக்கவல்லர்!, Unnai Yaar Mathikkavallar - உன்னை அளவிடக்கூடியவர்கள் யார்? |