திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 767 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 16 | தலைக் கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே | பதவுரை Show / Hideதலைக்கணம், Thalaikkanam - முதன்மைபெற்ற தேவகணமென்ன துகள், Thugal - க்ஷுத்ரமான ஸதாவரகணமென்ன குழம்பு சாதி, Kuzhambu Saadhi - மிச்ரயோனிகளான மநுஷ்ய திர்யக்ஜாதிகளென்ன இவற்றிலே சோதி, Sothi - அப்ராக்ருதமான தேஜஸ்ஸோடே கூட தோற்றம் ஆய், Thotram Aay - திருவவதரித்து நிலைக்கணகங்கள் காண, Nilai Kaanakangal Kaan - (தேவாதிகள் மாத்திரமே யன்றியே) ஸ்தாவரங்களும் (உன்னை) அனுபவிக்கும்படி வந்து நிற்றி, Vandhu Nitrri - வந்து நிற்கிறாயாகிலும் ஏலும் நீடு இரும் கலை கணங்கள், Aelum Needu Irum Kalai Kaanangal - நித்தியமாய் விரிந்தவையான வேதசாஸ்திர ஸமூஹங்கள் சொல் பொருளினால், Sol Porulinal - அபிதாநவ்ருத்தியாலும் கருத்தினால், Karuthinal - தாம்பர்ய வ்ருத்தியாலும் நினைக்க ஒணா, Ninaikka Onna - (உன் பெருமைகளை) நினைக்கவும் மாட்டாமல் மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி, Malai Kaanangal Pol Unarndhum Maatchi - பர்வத ஸமூஹஙக்ள்போல் அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலக்ஷண்யமானது நின் தன் மாட்சியே, Nin Than Maatchiye - உன்னுடைய வைலக்ஷண்ய மென்னுமித்தனை |