திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 765 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 14 | தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்ன தென்ன வல்லமல்ல வாகிலும்
சாம வேத கீதனாய சக்ர பாணி அல்லையே | பதவுரை Show / Hideதூய்மை யோகம் ஆயினாய், Thuymai Yogam Aayinai - ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே! துழாய் அலங்கல் மழையாய், Thuzhai Alangkal Mazhaiyai - திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே! ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ!, Aamai Aagi Aazh Kadal Thuyindra Aadhitheva - கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே! நின் நாமதேயம், Nin Naamathayam - உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள் இன்னது என்ன, Innadhu Enna - இன்னின்னவை யென்று சொல்ல வல்லம் அல்ல ஆகிலும், Vallam Alla Aagilum - யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும் சாம வேத கீதன் ஆய, Saama Veda Geethan Aaya - ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான சக்ர பாணி அல்லையே, Sakra Paani Allaiye - கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்) |