திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 682 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
682பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 6
மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே
பதவுரை Show / Hide
மின் அனைய நுண் இடையார், Min Anaiya Nun Idaiyaar - மின்னல் போல் ஸூக்ஷ்மமான இடையே உடையவர்களாகிய
உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம், Urupasiyum Menakaiyum Annavar Tham - ஊர்வசியும் மேனகையும் போலழகியவர்களான ஸ்த்ரீகளின்
பாடலொடும் ஆடல் அவை, Paadalodum Aadal Avai - பாட்டும் ஆட்டமுமாகிய அவற்றை
ஆதரியேன், Aadhariyen - யான் விரும்ப வில்லை
வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுகளின் கூட்டம்
தென்ன என பண் பாடும், Thenna Ena Pan Paadum - ” தென தென ” என்று ஆளத்தி வைத்து இசை பாடப் பெற்ற
வேங்கடத்துள், Vengadaththul - திருமலையிலே
அன்னனைய பொன் குவடு ஆம், Annanaiya Pon Kuvalu Aam - அப்படிப்பட்ட பொன் மயமான சிகரமாவதற்கு உரிய
அரு தவத்தன் ஆவேன், Aru Thavaththan Aavein - அருமையான தவத்தை யுடையவனாகக் கடவேன்.