திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 648 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
648பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 2
வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?
பதவுரை Show / Hide
கடி அரங்கத்து, Kadi Arangathu - நறு மணம் மிக்க கோயிலிலே
ஓர் ஈர் ஐ நூறு வாய், Oru Eer Ai Nooru Vaai - ஓராயிரம் வாய்களிலே
துதங்கள் ஆர்ந்த, Thuthangal Aarntha - ஸ்தோத்ர வாக்கியங்கள் நிறைந்திருக்கப் பெற்றவனாய்
வளை உடம்பின், Valai Udambin - வெளுத்த உடம்பை யுடையவனாய்
அழல், Azhala - (எதிரிக்ள வந்து கிட்ட வொண்ணாதபடி) அழலை உமிழா நிற்பவனான
நாகம், Naagam - ஆதி சேக்ஷன்
உமிழ்ந்த, Umizhndha - (தன் வாயினின்று) வெளிக் கக்கிய
செம் தீ, Sem Thee - செந் நிறமான ஆகநி ஜ்வாலையானது
சென்னி, Sennai - தலையின் மேலே
வீயாத மலர், Veeyadha Malar - அழிவில்லாத புஷ்பங்களாற் சமைத்த தொரு மேற் கட்டி போல
எங்கும் மேல் மேலும் பரந்து மிக, Engum Mel Maelum Parandhu Mika - மேற்புறமெங்கும் விஸ்தரித்து விளங்க
அதன் கீழ், Adhan Keel - (ஆதிசேக்ஷன் உமிழ்ந்த அக்நி ஜ்வாலையாகிற) அந்தப் புஷ்ப விதாநத்தின் கீழே)
அரவு அணையில், Aravu Anaigal - சேஷ சயநத்திலே
பள்ளி கொள்ளும், Palli Kollum - கண் வளர்ந்தருளா நிற்பவனும்
காயா பூ மலர் பிறங்கல் அன்ன, Kaayaa Poo Malar Pirangal Anna - காயாவின் அழகிய பூக்களாலே தொடுக்கப்பட்ட நீலமாலை போன்றவனாய்
மாலை, Maalai - பெருமை பொருந்தியவனாய்
மாயோனை, Maayoni - ஆச்சர்யனான ஸ்ரீரங்கநாதனை (அடியேன்)
மனம் தூண் பற்றி நின்று, Manam Thoon Patri Nindru - திருமணத் தூண்களிரண்டையும் அவலம்பாகப் பற்றிக்கொண்டு நின்று
என் வாய் ஆர வாழ்த்தும் நாள் என்று கொல், En Vaai Aara Vaazhthum Naal Endru Kol - என் வாய்த்தினவு தீர ஸ்துதி செய்யுங்காலம் என்றைக்கு வாய்க்குமோ?.