திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 57 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 4 | சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்க தறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடனல்லையேல் வா கண்டாய்–1-4-4 | பதவுரை Show / Hideசந்திரா,Chandira - சந்திரனே! சக்கரம்,Chakaram - திருவாழி ஆழ்வானை கையன்,Kaiyan - திருக்கையிலணிந்த கண்ணபிரான் ஒக்கலை மேல்,Okkalai mel - (என்) இடுப்பின்மேல் இருந்து,Irundhu - இருந்துகொண்டு தட கண்ணால்,Thada kannaal - விசாலமான கண்களாலே மலர் விழித்து,Malar vizhiththu - மலரப் பார்த்து உன்னையே,Unnaiye - உன்னையே சுட்டிகாட்டும்,Suttikattum - குக்ஷ்த்துக் காட்டுகின்றான்; தக்கது,Thakkadhu - (உனக்குத்) தகுதியானதை அறிதியேல்,Aridhiyel - அறிவாயாகில் (அன்றியும்) மக்கள் பெறாத,Makkal peraadha - பிள்ளை பெறாத மலடன் அல்லையேல்,Maladan allaiyel - மலடன் அல்லையாகில் சலம் செய்யாதே,Salam seyyadhe - கபடம் பண்ணாமல் வா கண்டாய்,Vaa kandai - வந்து நில்கிடாய். |