திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 518 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
518நாச்சியார் திருமொழி || 2 - நாமம் ஆயிரம் (இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுதல்) 5
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த் தெள்ளி நாங்கள் இளைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல் உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய் கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே
பதவுரை Show / Hide
கள்ளம், Kallam - கபடச் செய்கைகளை யுடைய
மாதவா, Madhava - கண்ண பிரானே!
கேசவா, Kesava - கேசவனே!
நாங்கள், Naangal - நாங்கள்
வெள்ளை நுண் மணல் கொண்டு, Vellai Nun Manal Kondu - வெளுத்துத் சிறுத்த மணல்களைக் கொண்டு
வீதியாய், Veethiyaai - தெருவிலே
விசித்திரப்பட, Visithirapada - (அனைவரும் கண்டு) ஆச்சாரியப்படும்படி
தெள்ளி இழைத்த, Thelli Izhaitha - தெளிந்து கட்டின
சிற்றில், Sitril - சிற்றிலாகிற
கோலம், Kolam - கோலத்தை
அழித்தி ஆகிலும், Azhithi Aagilum - நீ அழித்தாயாகிலும், (அதற்காக)
உள்ளம், Uḷḷam - (எங்களுடைய) நெஞ்சானது
ஓடி, Oḍi - உடைந்து
உருகல் அல்லால், Urugal allaal - உருகுமத்தனை யொழிய
உன்தன்மேல், Unthanmel - உன்மேலே
உரோடம் ஒன்றும் இலோம், Urodam ondrum illom - துளியும் கோபமுடையோமல்லோம்
உன்முகத்தன, Un mugathana - உன்முகத்திலுள்ளவை
கண்கள் அல்லவே, Kangal allave - கண்களன்றோ!