திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3902 | உபதேச ரத்னமாலை || பெரியாழ்வார் என்ற திரு நாமத்துக்கு காரணம் அருளிச் செய்கிறார் – 18 | மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி -பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர் | பதவுரை Show / Hideமூத்தவரும் இல்லாத போதும் -பெரிய பிரபந்தங்கள் அருளிச் செய்யாதவர் என்றாலும் – நம் பட்டர் பிரானுக்கு நம் பெரியாழ்வார் என்கிற விருது – -மற்ற ஆழ்வார்கள் உடைய அபி நிவேசத்தில் காட்டிலும் – எம்பெருமானுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்து -இவரது விஞ்சி எழுந்த பரிவு காரணமாக – மங்களா சாசனம் செய்து அருளி யதாலேயே – காதாசித்கமாக இல்லாமல் இதுவே யாத்ரையாக இருந்ததே இவருக்கு – |