திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3878 | இராமாநுச நூற்றந்தாதி || 102 | நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந் தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன்
கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ்
வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே? | பதவுரை Show / Hideமனம், Manam - எனது நெஞ்சானது உன் குணங்களை உன்னி, Un Gunangalai Unni - தேவரீருடைய திருக் குணங்களைச் சிந்தித்து நையும், Naiyum - கரைகின்றது; என் நா, En Naa - எனது வாக்கானது இருந்து, Irundhu - நிலை நின்று எம் ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும், Em Aiyan Raamanusan Endru Azhaikkum - எமக்கு ஸ்வாமியான எம் பெருமானாரே! என்று அழைகின்றது. அரு வினையேன், Aru Vinaiyen - மஹா பாபியான என்னுடைய கையும், Kaiyum - கைகளும் தொழும், Thozhum - அஞ்ஜலி பண்ணு கின்றன; கண், Kan - கண்களானவை காண கருதிடும், Kaan Karudidum - (தேவரீரை) ஸேவிக்க ஆசைப்படுகின்றன; கடல்புடைசூழ் வையம் இதனில், Kadalpudaisuzh Vaiyam Idanil - சுற்றிலும் கடல் சூழப் பெற்ற இப்பூ மண்டலத்தினாள்ளே உன் வண்மை, Un Vanmai - தேவரீருடைய ஔதார்ய குணம் என்பால் வளர்ந்தது என், Enpal Valarnthathu En - அடியேன் மீது (இவ்விதமாக) வளர்ந்ததற்குக் காரணம் யாதோ?. |