திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3878 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3878இராமாநுச நூற்றந்தாதி || 102
நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந் தெம் ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன் கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ் வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே?
பதவுரை Show / Hide
மனம், Manam - எனது நெஞ்சானது
உன் குணங்களை உன்னி, Un Gunangalai Unni - தேவரீருடைய திருக் குணங்களைச் சிந்தித்து
நையும், Naiyum - கரைகின்றது;
என் நா, En Naa - எனது வாக்கானது
இருந்து, Irundhu - நிலை நின்று
எம் ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும், Em Aiyan Raamanusan Endru Azhaikkum - எமக்கு ஸ்வாமியான எம் பெருமானாரே! என்று அழைகின்றது.
அரு வினையேன், Aru Vinaiyen - மஹா பாபியான என்னுடைய
கையும், Kaiyum - கைகளும்
தொழும், Thozhum - அஞ்ஜலி பண்ணு கின்றன;
கண், Kan - கண்களானவை
காண கருதிடும், Kaan Karudidum - (தேவரீரை) ஸேவிக்க ஆசைப்படுகின்றன;
கடல்புடைசூழ் வையம் இதனில், Kadalpudaisuzh Vaiyam Idanil - சுற்றிலும் கடல் சூழப் பெற்ற இப்பூ மண்டலத்தினாள்ளே
உன் வண்மை, Un Vanmai - தேவரீருடைய ஔதார்ய குணம்
என்பால் வளர்ந்தது என், Enpal Valarnthathu En - அடியேன் மீது (இவ்விதமாக) வளர்ந்ததற்குக் காரணம் யாதோ?.