திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3873 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3873இராமாநுச நூற்றந்தாதி || 97
தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர்,மன்னு தாமரைத் தாள் தன்னை யுற் றாட் செய்ய என்னை யுற் றானின்று தன் தகவால் தன்னை யுற் றாரன்றித் தன்மை யுற் றாரில்லை என்றறிந்து தன்னை யுற் றாரை இராமா னுசன் குணம் சாற்றிடுமே
பதவுரை Show / Hide
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாரானவர்,
தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து, Thannai Utrar Andri Thannai Utrarai Kunam Sarridum Thanmai Utrar Illai Endru Arinthu - தம்மைப் பற்றி யிருப்பாருண்டே யொழிய தம்மைப் பற்றிய யிருப்பவர்களுடைய குண கீர்த்தனம் பண்ணும் ஸ்வ பக்த பக்தர்கள் ஒருவருமில்லை யென்று திருவுள்ளம் பற்றி
என்னை, Ennai - அடியேனை
இன்று, Indru - இன்றைத் தினத்தில்
தன் தகவால், Than Thakaval - தமது அருளாலே
தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர், Thannai Utra Aal Seyyum Thanmaiyinor - தம்மை யடைந்து கைங்கரியம் பண்ணும் ஸ்வபாவ முடையரான ஸ்வ பக்தர்களுடைய
மன்னா தாமரை தாள் தன்னை உற்று ஆள் செய்ய, Manna Thamarai Thal Thannai Utra Aal Seyya - ஒன்றோடொன்று சேர்ந்த திருவடித் தாமரைகளை நான் அடைந்து ஆட் செய்யும்படி
உய்த்தான், Uytthan - வைத்தருளினார்.