திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3862 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3862இராமாநுச நூற்றந்தாதி || 86
பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே உற்றா ரென வுழன் றோடி நை யேனினி, ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமா னுசனைக் கருது முள்ளம் பெற்றார் எவர், அவ ரெம்மை நின் றாளும் பெரியவரே
பதவுரை Show / Hide
பற்றா மனிசரை பற்றி, Pattra Manisarai Pattri - உபயோக மற்ற மநுஷ்யர்களைப் பற்றி
அப் பற்று விடாது, Ap Pattru Vidathu - அந்தப் பற்றுதலை விடாமல்
அவரே உற்றார் என, Avarae Utraar Ena - அவர்களையே உறவினராகக் கொண்டு
உழன்று, Uzhandru - அவர்கள் பினனே அலைந்து
ஓடி, Odi - அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி
இனி நையேன், Ini Naiyen - இனி மேல் துவள மாட்டேன்;
ஒள்ளிய நூல் கற்றார், Olliya Nool Kattraar - சிறந்த சாஸ்த்ரங்களைக் கற்றவர்களாலே
பரவும், Paravum - கொண்டாடப் படுகிற
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
கருதும் உள்ளம் பெற்றார் யவர், Karudum Ullam Pettraar Yavar - அநுசந்திக்கும் படியான நெஞ்சை யுடையோர் யாவரோ,
அவர், Avar - அந்த மஹான்களே
எம்மை, Emmai - நம்மை
நின்று ஆளும் பெரியவர், Ninru Aalum Periyavar - சாஸ்வதமாக அடிமை கொள்ளும் மஹாத்மாக்கள்.
ஒள்ளிய நூல், Olliya Nool - “சுடர்மிகு சுருதி” என்றார் ஆழ்வாரும்.