திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3860 | இராமாநுச நூற்றந்தாதி || 84 | கண்டு கொண் டேனெம் இராமா னுசன் றன்னை காண்டலுமே
தொண்டு கொண் டேன் அவன் தொண்டர் பொற் றாளில் என் தொல்லை வெந் நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்று
உண்டு கொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே | பதவுரை Show / Hideஎம் இராமாநுசன் தன்னை, Em Iramanucan Tannai - ஸ்வாமி எம்பெருமானாரை இன்று கண்டு கொண்டேன், Inru Kandu Konden - இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்; காண்டலுமே, Kaandalume - இப்படி தெரிந்து கொண்டவளலிலே அவன் தொண்டர் பொன் தாளில், Avan Thondar Pon Thaalil - அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில் தொண்டு கொண்டேன், Thondu Konden - அடிமைப்பட்டேன்; (அதனால்) என் தொல்லை வெம் நோய், En Thollai Vem Noi - எனது பழைய கொடு வினைகளை விண்டு கொண்டேன், Vindu Konden - நீக்கிக்கொண்டேன், அவன் சீர் வெள்ளம் வாரியை, Avan Seer Vellam Vaariyi - அவருடைய கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை வாய் மடுத்து உண்டு கொண்டேன், Vaai Maduthu Undu Konden - வாயார அநுபவிக்கப் பெற்றேன்; இன்னம் உற்றன, Innam Utrana - இப்படியாக இன்னமும் நான் பெற்ற நன்மை களை ஒதில், Othil - சொல்லத்தொடங்கினால் உலப்பு இல்லை, Ulappu Illai - (அதுக்கு) ஒரு முடிவு கிடையாது. |