திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3859 | இராமாநுச நூற்றந்தாதி || 83 | சீர் கொண்டு பேரறம் செய்து,நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டு கொள்ளே | பதவுரை Show / Hideஇராமநுசா, Iramanuca - எம்பெருமானாரே!, சீர் கொண்டு, Cir Kontu - சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய் பேர் அறம் செய்து, Per Aram Seytu - சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து நல் வீடு செறிதும் என்னும், Nal Vitu Ceritume Ennum - பரம புருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன், Par Konta Menmaiyar Kuttan Allen - ப்ரஸித்தமான ப்ரபாவத்தை யுடைய ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்; உன் பத யுகம் ஆம், Un Pata Yugam Am - தேவரீருடைய உபய பாதங்களாகிற ஏர் கொண்ட வீட்டை, Er Konta Vittai - பரம விலக்ஷணமான மோக்ஷத்தை எளிதினில் எய்துவன், Elitinil Eytuvan - ஸுலபமாக அடைந்திடுவேன்; கார் கொண்ட, Kar Konta - (ஔதார்யத்தில்) மேகத்தை வென்றிருக்கிற தேவரீருடைய வண்மை இது, Vanmai Ithu - ஔதார்யம் இப்படிப் பட்டது; கண்டு கொள், Kandu Kol - தேவரீரே இதனைக் கண்டு கொள்ளலாம். |