திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3858 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3858இராமாநுச நூற்றந்தாதி || 82
தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீ வினையால் உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில் பொருவற்ற கேள்வியனாக்கி நின் றானென்ன புண்ணீயனோ! தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே
பதவுரை Show / Hide
தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது, Therivu Utra Gyaanam Seriya Peraadhu - தெளிவான ஞானத்தைச் சேரப் பெறாமல்
வெம் தீ வினையால், Vem Thi Vinaiyal - மிகவுங் கொடியதான கருமத்தாலே
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை, Uru Arra Nanattu Ulalkinra Ennai - உபயோக மற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலை யில்லாமல்) திரிகிற என்னை
ஒரு பொழுதில், Oru Polutil - ஒரு க்ஷண காலத்தில்
பொருவு  அற்ற கேள்வியனாக்கி நின்றான், Poruvu Arra Kelviyanaki Ninran - ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கி யருளினவரும்
தெரிவு உற்ற கீர்த்தி, Terivu Urra Kirtti - ப்ரஸித்தமான புகழை யடையவரும்
சீர் முகில் என்னும், Cir Mukil Ennum - (ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என்ன புண்ணியனோ, Enna Punniyano - என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.)