திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3856 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3856இராமாநுச நூற்றந்தாதி || 80
நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர்,அவர்க்கே எல்லா விடத்திலும் என்று மெப் போதிலும் எத் தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே
பதவுரை Show / Hide
நல்லார் பரவும் இராமாநுசன், Nallaar Paravum Iraamaanusan - ஸத்துக்களாலே கொண்டாடப்படுகிற எம் பெருமானாருடைய
திரு நாமம், Thiru Naamam - திரு நாமத்தை
நம்ப வல்லார் திறத்தை, Namba Vallar Thirathai - (தங்களுக்குத் தஞ்சமாக நம்பி யிருக்க வல்லவர்களுடைய படிகளே
மறவாதவர்கள் எவர், Maravaathavargal Evar - மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ,
அவர்க்கே, Avarkke - அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே
எல்லா இடத்திலும், Ella Idaththilum - ஸகல தேசங்களிலும்
என்றும், Endrum - ஸகல அவஸ்தைகளிலும்
எத் தொழும்பும், Eth Thozhumbum - ஸகலவித கைங்கரியங்களையும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால், Sollaal Manaththaal Karumaththinaal - மனமொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும்
சோர்வு இன்றியே செய்வன், Soarvu Indriye Seivam - பிரியாதே யிருந்து செய்வேன்.