திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3855 | இராமாநுச நூற்றந்தாதி || 79 | பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து,இந்தப் பூதலத்தே
மெய்மைப் புரக்கும் இராமா னுசன் நிற்க, வேறு நம்மை
உய்யக் கொள வல்ல தெய்வமிங் கியாதென்றுலர்ந் தவமே
ஐயப் படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே | பதவுரை Show / Hideபொய்யை சுரக்கும் பொருளை துரந்து, Poyyai Surakkum Porulai Thurandhu - பொய்யான விஷயத்தையே மேன் மேலும் வெளிப் படுத்துகிற (புற மதத்தவர்களின்) அர்த்தங்களைக் கண்டித்து இந்த பூதலத்தே, Indha Poodhalatthae - இப் பூமியிலே மெய்யை புரக்கும், Meiyyai Purakkum - ஸத்யத்தை ரக்ஷிக்கிற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் நிற்க, Nirka - எழுந்தருளி யிருக்கும் போது வையத்து உள்ளோர், Vaiyaththu Ullor - இப் பூமியிலுள்ளவர்கள் நம்மை உய்யக் கொள்ள வல்ல, Nammai Uyya Kolla Valla - நம்மை உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடிய வேறு தெய்வம் இங்கு யாது என்று, Veeru Deivam Ingu Yaadhu Endru - வேறு எதாவது தேவதை இவ்வுலகில் உண்டோ என்று விசாரித்துக் (கொண்டு) உலர்ந்து, Ularndhu - மன வருத்தத்தாலே உடம்பு உலர்ந்து நல் அறிவு இமந்து, Nal Arivu Imandhu - (எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருக்கை யாகிற) நல்ல ஞானம் பெறாமல் அவமே, Avame - வீணாக ஐயம் படா நிற்பர், Aiyam Pada Nirpar - ஸம்சயப் படா நின்றார்கள் ஐயா! |