திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3844 | இராமாநுச நூற்றந்தாதி || 68 | ஆரெனக் கின்று நிகர்ச் சொல்லில் மாயன் அன்று ஐவரைத் தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே | பதவுரை Show / Hideமாயன், Maayan - ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான் அன்று, Andru - முற் காலத்தில் ஐயர், Aiyar - பஞ்ச பாண்டவர்களுடைய தெய்வம் தேரினில், Deivam Therinil - தெய்வத் தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்து கொண்டு) செப்பிய, Seppiya - அருளிச் செய்த கீதையின், Geethaiyin - பகவத் கீதையினுடைய செம்மை பொருள், Semmai Porul - ஸ்வ ரஸமான அர்த்தத்தை தெரிய, Theriya - (அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி பாரினில், Paarinil - இப் பூமிலே சொன்ன, Sonna - (கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை பணியும், Paniyum - ஆச்ரயித்திருக்கும் நல்லோர், Nallor - விலக்ஷண புருஷர்களுடைய சீரினில், Seerinil - கல்யாண குணங்களிலே என் ஆவியும் சிந்தையும், En Aaviyum Sindhaiyum - எனது ஆத்மாவும் மநஸ்ஸூம் சென்று பணிந்தது, Sendru Panindhathu - சென்று சேர்ந்து விட்டன; சொல்லில், Sollil - சொல்லுமளவில் இன்று, Indru - இக் காலத்தில் எனக்கு ஆர் நிகர், Enakku Aar Nigar - எனக்கு ஆர் ஒப்பாவார்? |