திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3844 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3844இராமாநுச நூற்றந்தாதி || 68
ஆரெனக் கின்று நிகர்ச் சொல்லில் மாயன் அன்று ஐவரைத் தெய்வத் தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே
பதவுரை Show / Hide
மாயன், Maayan - ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான்
அன்று, Andru - முற் காலத்தில்
ஐயர், Aiyar - பஞ்ச பாண்டவர்களுடைய
தெய்வம் தேரினில், Deivam Therinil - தெய்வத் தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்து கொண்டு)
செப்பிய, Seppiya - அருளிச் செய்த
கீதையின், Geethaiyin - பகவத் கீதையினுடைய
செம்மை பொருள், Semmai Porul - ஸ்வ ரஸமான அர்த்தத்தை
தெரிய, Theriya - (அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி
பாரினில், Paarinil - இப் பூமிலே
சொன்ன, Sonna - (கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
இராமாநுசனை, Iramanusanai - எம்பெருமானாரை
பணியும், Paniyum - ஆச்ரயித்திருக்கும்
நல்லோர், Nallor - விலக்ஷண புருஷர்களுடைய
சீரினில், Seerinil - கல்யாண குணங்களிலே
என் ஆவியும் சிந்தையும், En Aaviyum Sindhaiyum - எனது ஆத்மாவும் மநஸ்ஸூம்
சென்று பணிந்தது, Sendru Panindhathu - சென்று சேர்ந்து விட்டன;
சொல்லில், Sollil - சொல்லுமளவில்
இன்று, Indru - இக் காலத்தில்
எனக்கு ஆர் நிகர், Enakku Aar Nigar - எனக்கு ஆர் ஒப்பாவார்?