திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3837 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3837இராமாநுச நூற்றந்தாதி || 61
கொழுந்து விட் டோடிப் படரும் வெங் கோள் வினை யால்,]நிரயத் தழுந்தி யிட் டேனை வந் தாட் கொண்ட பின்னும், அரு முனிவர் தொழுந் தவத்தோனெம் இராமானுசன் தொல் புகழ் சுடர் மிக் கெழுந்தது,அத்தால் நல்லதிசயங் கண்ட திரு நிலமே
பதவுரை Show / Hide
அருமுனிவர் தொழும், Arumunivar Thozhum - அருமையான நிஷ்டையை யுடைய மஹான்களாலே மஹான்களாலே ஸேவிக்கப் பெற்றவராயும்
தவத்தோன், Thavaththon - ப்ரபத்தியாகிற தபஸ்ஸை யுடையவராயு மிருக்கிற
எம் இராமாநுசன், Em Iraamaanusan - ஸ்வாமி எம்பெருமானாருடைய
தொல் புகழ், Thol Pugazh - நித்யமான கல்யாண குணங்கள்
கொழுந்து விட்டு ஒடி படரும் வெம்கோள் வினையால், Kozhundhu Vittu Odi Padarum Vemkool Vinaiyaal - மேன் மேலும் அதிகமாகப் பெருகுகின்ற க்ரூரமாய்ப் பரப்லமான துஷ் கர்மத்தாலே
நிரயத்து அழுந்தி யிட்டேனை, Nirayathu Azhundhi Ittena - ஸம்ஸாரமாகிற நரகத்திலே அழுந்திக் கிடந்த என்னை
வந்து ஆள் கொண்ட பின்னும் சுடர் மிக்கு எழுந்தது, Vandhu Aal Kondha Pinnum Sudar Mikku Ezhundhadhu - வந்து ஆட்படுத்திக் கொண்ட பின்பும் ஒளி குன்றாதே  முன்னிலும் விசேஷமாக விளங்கா நின்றன:
அத்தால், Aththal - அதைக் கண்டு
இரு நிலம், Iru Nilam - விசாலமான இப் பூமண்டலம்
நல்ல அதிசயம் கண்டது, Nalla Adhisayam Kandu - மிக்க ஆச்சரியங் கொண்டது.