திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3830 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3830இராமாநுச நூற்றந்தாதி || 54
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வு கண்டே
பதவுரை Show / Hide
மண் உலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன், Man Ulavil Eettiya Seelathu Raamaanusan Than - இப் பூலோகத்தில் மேன் மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை யுடையரான எம்பெருமானாருடைய
இயல்வு, Iyalvu - ஸ்வபாவத்தை
கண்டு, Kandu - பார்த்து,
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன, Naattiya Neesa Samayangal Maandana - (துஷ்ட யுக்திகளாவே) நிலை நிறுத்தப் பட்டிருந்த ஷூத்ர மதங்களெல்லாம் ஒழிந்தன;
நாரணனை காட்டிய, Naaranaiyai Kaattiya - ஸ்ரீமந் நாராயணனைப் பிரதிபாதிக்க
வேதம், Vedham - வேதங்களானவை
களிப்பு உற்றது, Kalippu Utrathu - (நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக்கடைந்தன;
தென் குருகை வள்ளல், Then Kurugai Vallar - அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த)
வாட்டம் இலா, Vaatam Ila - ஒரு குறையுமற்ற
வண் தமிழ் மறை, Van Tamil Marai - சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி
வாழ்ந்தது, Vaazhnthathu - வாழ்வு பெற்றது.