திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3825 | இராமாநுச நூற்றந்தாதி || 49 | ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி யிறந்தது வெங் கலி பூங்கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானதில் மன்னும் இராமானுசனித் தலத் துதித்தே | பதவுரை Show / Hideபூ கமலம் தேன், Poo Kamalam Then - தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது நதி பாய், Nadhi Pai - ஆறாகப் பெருகப் பெற்ற வயல், Vayal - கழனிகளையுடைய தென் அரங்கன், Then Arangan - ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளி யிருக்கிற பெரிய பெருமாளுடைய கழல், Kazhal - திருவடிகளை சென்னி வைத்து, Sennai Vaiththu - சிரஸா வஹித்துக் கொண்டு தான் அதில் மன்னும், Thaan Athil Mannum - தாம் அத் திருவடிகளிலேயே ப்ரவணா யிருக்கிற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் இ தலத்து உதித்து, I Thalathu Uthiththu - இப் பூமியிலே திருவவதரித்ததனால் செம்மை அறம் நெறி, Semmai Aram Nerii - ருஜூவான தர்ம மார்க்கமானது ஆனது, Anathu - ஸத்தை பெற்றது; பொய்ம்மை அறு சமயம், Poymmai Aru Samayam - பொய்யே நிறைந்து கிடக்கிற அறு சமயங்களும் பொன்றி போனது, Pondri Ponathu - நாசமடைந்தன; வெம் கலி இறந்தது, Vem Kali Irandhathu - கொடிய கலியுகமும் மாண்டது |