திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3825 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3825இராமாநுச நூற்றந்தாதி || 49
ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறு சமயம் போனது பொன்றி யிறந்தது வெங் கலி பூங்கமலத் தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தானதில் மன்னும் இராமானுசனித் தலத் துதித்தே
பதவுரை Show / Hide
பூ கமலம்  தேன், Poo Kamalam Then - தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது
நதி பாய், Nadhi Pai - ஆறாகப் பெருகப் பெற்ற
வயல், Vayal - கழனிகளையுடைய
தென் அரங்கன், Then Arangan - ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளி யிருக்கிற பெரிய பெருமாளுடைய
கழல், Kazhal - திருவடிகளை
சென்னி வைத்து, Sennai Vaiththu - சிரஸா வஹித்துக் கொண்டு
தான் அதில் மன்னும், Thaan Athil Mannum - தாம் அத் திருவடிகளிலேயே  ப்ரவணா யிருக்கிற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
இ தலத்து உதித்து, I Thalathu Uthiththu - இப் பூமியிலே திருவவதரித்ததனால்
செம்மை அறம் நெறி, Semmai Aram Nerii - ருஜூவான தர்ம மார்க்கமானது
ஆனது, Anathu - ஸத்தை பெற்றது;
பொய்ம்மை அறு சமயம், Poymmai Aru Samayam - பொய்யே நிறைந்து கிடக்கிற அறு சமயங்களும்
பொன்றி போனது, Pondri Ponathu - நாசமடைந்தன;
வெம் கலி இறந்தது, Vem Kali Irandhathu - கொடிய கலியுகமும் மாண்டது