திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3818 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3818இராமாநுச நூற்றந்தாதி || 42
ஆயிழை யார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்றழுந்தி மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மா மலராள் நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் தூயவன் தீதில் இராமா னுசன் தொல் லருள் சுரந்தே
பதவுரை Show / Hide
மா மலராள் நாயகன், Maa Malaraal Naayagan - லக்ஷ்மீ பதியான
அரங்கன், Arangan - பெரிய பெருமாள்
எல்லா உயிர்கட்கும் நாதன் என்னும், Ella Uyirkadkum Naadhan Ennum - ஸகல ஆத்துமாக்களுக்கும் சேஷி என்று உபதேசிப்பவரும்
தூயவன், Thuyavan - பரம பரிசுத்தரும்
தீது இல், Theethu Il - எவ்வகைக் குற்றமுமில்லாத தவருமான
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்;
ஆய் இழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்திமாயும் என் ஆவியை, Aayi Izhaiyaar Kongai Thangum Akkadhala Alaru Azhundhimayum En Aaviyai - அழகிய ஆபரணங்களணிந்த ஸ்த்ரிகளுடைய கொங்கைத் தடத்தில் தங்கும் ஆசையாகிற சேற்றிலே அழுந்தி) நசித்துப் போகிற என் ஆத்மாவை
தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான், Thol Arul Surandhu Vandhu Indru Eduththaan - இன்று நிர்ஹேதுக க்ருபை பண்ணி வந்து உத்தரித் தருளினார்.