திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3817 | இராமாநுச நூற்றந்தாதி || 41 | மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே | பதவுரை Show / Hideஎங்கள் மாதவனே, Engal Maadhavane - நமக்கு நாதனான திருமால் தானே மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து, Manmichai Yoonigal Thorum Pirandhu - (இப்பூமியிலுள்ள மநுஷ்யாதி) யோனிகள் தோறும் அவதரித்து கண்உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம், Kanura Nirkilum Kaanagilla Ulagorkal Ellam - எல்லாருடைய கண்ணுக்கும் தன்னை இலக்காக்கிக் கொண்டு நின்ற விடத்திலும் (அவனை நம்முடைய நாதனென்று) காண மாட்டாதிருக்க இவ்வுலகத்தாரெல்லாரும் அண்ணல் இராமாநுசன வந்து தோன்றிய அப்பொழுதே, Annal Iraamaanuchan Vandhu Thornthiya Appozhudhe - ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானார் இங்கே வந்தவதரித்தவுடனே நண்ண அரு ஞானம் தலைக் கொண்டு, Nanna Aru Gyaanam Thalaik Kondu - பெறுதற்கரிதான ஞானம் அதிகரிக்கப் பெற்று நாரணற்கு ஆயினர், Naaranarku Aayinargal - ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப் பட்டனர். |