திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3815 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3815இராமாநுச நூற்றந்தாதி || 39
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே மருள் கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார் தரமோ? இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே
பதவுரை Show / Hide
பொருள் என்றும், Porul Endrum - த்ரவ்யம் என்று சொல்லிக் கொண்டும்
புதல்வர் என்றும், Puthalvar Endrum - புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும்
பூமி என்றும், Bhoomi Endrum - க்ஷேத்ரமென்று சொல்லிக் கொண்டும் (அர்த்த புத்திராதிகளையே விரும்பி)
மருள் கொண்டு, Marul Kondu - அறிவு கெட்டு
இளைக்கும் நமக்கு, Ilaiyum Namakku - வருந்திக் கொண்டு கிடக்கிற நமக்கு
இருள் கொண்ட, Irul Konda - அஜ்ஞாநத்தோடு கூடிய க்ரூரமான துக்கங்களை
மாற்றி, Maatri - போக்கடித்து
தன் ஈறு இல் பெரு புகழே தெருளும் தெருள், Than Eeru Il Peru Pugazhe Therulum Therul - தம்முடைய முடிவில்லாத சிறந்த கல்யாண குணங்களையே சிந்திக்கக் கடவதான ஞானத்தை
தந்து, Thandu - அருளித்தருளி
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
செய்யும் சேமங்கள், Seyyum Semangal - செய்கிற க்ஷேமங்களானவை
நெஞ்சே, Nenchae - ஒ மனமே!
மற்று உளார் தரமோ, Mattru Ular Tharamo - மற்ற பேர்களுக்குச் செய்கிற மாதிரியோ (அல்ல; விலக்ஷணம் என்ற படி.)