திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3809 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3809இராமாநுச நூற்றந்தாதி || 33
அடையார் கமலத் தலர் மகள் கேள்வன் கை யாழி யென்னும் படையொடு நாந்தகமும் படர் தண்டும்,ஒண் சார்ங்க வில்லும் புடையார் புரி சங்கமு மிந்தப் பூதலம் காப்பதற்கென்று இடையே இராமானுச முனி யாயின இந் நிலத்தே
பதவுரை Show / Hide
அடை ஆர் கமலத்து அலர் மகள் கேள்வன், Adai Aar Kamalaththu Alar Magal Kaelvan - தளங்கள் நெருங்கிய தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமானுடைய
கை ஆழி என்னும் படையோடு, Kai Aazhi Ennum Padaiyodu - திருக் கையிலே (விளங்கா நின்ற திருவாழி யென்கிற திவ்யா யுதத்தோடே
நாந்தகமும், Naanthakamum - நாந்தகவாளும்
படர் தண்டும், Padar Thandum - ரக்ஷணத் தொழிலிலே பரந்திரா  நின்ற கதையும்
ஒண் சார்ங்கம் வில்லும், On Sargngam Villum - அழகிய ஸ்ரீ சார்ங்க மென்கிற வில்லும்
புடை ஆர் புரி சங்கமும், Pudai Aar Puri Sangamum - ஒரு பக்கத்துக்குத் தானே ஆபரணமாகப் போரும் படியான அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யமும் (ஆக இப் பஞ்சாயுதாழ்வார்கள்)இந்த பூதலம் காப்பதற்கு என்று
இந்தப் பூமியை ரக்ஷிக்கைக்காக இந் நிலத்து, Indhap Bhoomiyai Rakshikkaikaga Inth Nilaththu - இப் பூ மண்டலத்திலே இராமாநுச முனி இடையே ஆயின