திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3809 | இராமாநுச நூற்றந்தாதி || 33 | அடையார் கமலத் தலர் மகள் கேள்வன் கை யாழி யென்னும்
படையொடு நாந்தகமும் படர் தண்டும்,ஒண் சார்ங்க வில்லும்
புடையார் புரி சங்கமு மிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமானுச முனி யாயின இந் நிலத்தே | பதவுரை Show / Hideஅடை ஆர் கமலத்து அலர் மகள் கேள்வன், Adai Aar Kamalaththu Alar Magal Kaelvan - தளங்கள் நெருங்கிய தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமானுடைய கை ஆழி என்னும் படையோடு, Kai Aazhi Ennum Padaiyodu - திருக் கையிலே (விளங்கா நின்ற திருவாழி யென்கிற திவ்யா யுதத்தோடே நாந்தகமும், Naanthakamum - நாந்தகவாளும் படர் தண்டும், Padar Thandum - ரக்ஷணத் தொழிலிலே பரந்திரா நின்ற கதையும் ஒண் சார்ங்கம் வில்லும், On Sargngam Villum - அழகிய ஸ்ரீ சார்ங்க மென்கிற வில்லும் புடை ஆர் புரி சங்கமும், Pudai Aar Puri Sangamum - ஒரு பக்கத்துக்குத் தானே ஆபரணமாகப் போரும் படியான அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யமும் (ஆக இப் பஞ்சாயுதாழ்வார்கள்)இந்த பூதலம் காப்பதற்கு என்று இந்தப் பூமியை ரக்ஷிக்கைக்காக இந் நிலத்து, Indhap Bhoomiyai Rakshikkaikaga Inth Nilaththu - இப் பூ மண்டலத்திலே இராமாநுச முனி இடையே ஆயின |