திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3805 | இராமாநுச நூற்றந்தாதி || 29 | கூட்டும் விதி யென்று கூடுங்கொலோ,தென் குருகைப் பிரான்
பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத், தன் பத்தி யென்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டின்ப மெய்திடவே? | பதவுரை Show / Hideதென் குருகை பிரான், Then Kurugai Piraan - நம்மாழ்வாருடைய பாட்டு என்னும், Paatu Ennum - பாசுரங்கள் என்று ப்ரஸித்தமாய் வேதம், Vedham - வேத ரூபமாய் பசும் தமிழ் தன்னை, Pasum Tamil Thannai - செந்தமிழாயிருக்கின்ற திருவாய் மொழியை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த, Than Pathi Ennum Veettin Kan Vaiththa - தம்முடைய பக்தியாகிற மாளிகையிலே ஸ்தாபித்தருளிய இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானாருடைய புகழ், Pugazh - கல்யாண குணங்களை மெய் உணர்ந்தோர், Mei Unarnthoor - உள்ளபடி அறிந்திருக்கு மவர்களுடைய ஈட்டங்கள் தன்னை, Eettangal Thannai - கோஷ்டிகளை என் நாட்டங்கள் கண்டு, En Naatthangal Kandu - என் கண்களானவை ஸேவித்து இன்பம் எய்திட, Inbam Eydhida - ஸூகிக்கும் படியாக கூட்டும் விதி, Kootum Vidhi - அமைக்க வல்ல (அவருடைய) க்ருபையானது என்று கூடுங்கொல், Endru Koodungol - என்றைக்கு வாய்க்குமோ? |