திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3797 | இராமாநுச நூற்றந்தாதி || 21 | நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற் றுலகில் துவள்கின்றிலேன், இனித் தூய் நெறி சேர்
எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணை யடியாம்
கதி பெற் றுடைய இராமானுச னென்னைக் காத்தனனே | பதவுரை Show / Hideதூய் நெறி சேர், Thuy Neri Ser - பரிசுத்தமான அனுட்டானமுடைய யதிகளுக்கு இறைவன், Iraivan - தலைவரான யமுனைத் துறைவன், Yamunai Thuraivan - ஆளவந்தாருடைய இணை அடி ஆம் கதி, Inai Adi Aam Gathi - உபய பாதங்களாகிற ப்ராப்யத்தை பெற்று, Petru - பெற்று (அதனாலே) உடைய, Udaiya - உலகத்தார்க் கெல்லாம் ஸ்வாமியா யிருக்கிற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் என்னை காத்தனன், Ennai Kaaththanan - என்னை ரக்ஷித் தருளினார்; (ஆன பின்பு) இனி, Ini - இனி மேல், நிதியை பொழியும் முகில் என்று, Nithiyai Pozhiyum Mukil Endru - “நிதிகளை வர்ஷிக்கிற மேகமே!” என்று துதி கற்று, Thuthi Kattru - ஸ்தோத்ரங்களைப் பண்ணிக் கொண்டு உலகில், Ulagil - இவ்வுலகத்தில் நீசர் தம், Neesar Tham - நீசராயிருப்பவருடைய வாசல் பற்றி, Vaasal Patri - வாசலைப் பற்றி நின்று துவள்கின்றிலேன், Thuvazhkindrileen - வருந்த மாட்டேன் |