திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3797 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3797இராமாநுச நூற்றந்தாதி || 21
நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றித் துதி கற் றுலகில் துவள்கின்றிலேன், இனித் தூய் நெறி சேர் எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணை யடியாம் கதி பெற் றுடைய இராமானுச னென்னைக் காத்தனனே
பதவுரை Show / Hide
தூய் நெறி சேர், Thuy Neri Ser - பரிசுத்தமான அனுட்டானமுடைய யதிகளுக்கு
இறைவன், Iraivan - தலைவரான
யமுனைத் துறைவன், Yamunai Thuraivan - ஆளவந்தாருடைய
இணை அடி ஆம் கதி, Inai Adi Aam Gathi - உபய பாதங்களாகிற ப்ராப்யத்தை
பெற்று, Petru - பெற்று (அதனாலே)
உடைய, Udaiya - உலகத்தார்க் கெல்லாம் ஸ்வாமியா யிருக்கிற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
என்னை காத்தனன், Ennai Kaaththanan - என்னை ரக்ஷித் தருளினார்; (ஆன பின்பு)
இனி, Ini - இனி மேல்,
நிதியை பொழியும் முகில் என்று, Nithiyai Pozhiyum Mukil Endru - “நிதிகளை வர்ஷிக்கிற மேகமே!” என்று
துதி கற்று, Thuthi Kattru - ஸ்தோத்ரங்களைப் பண்ணிக் கொண்டு
உலகில், Ulagil - இவ்வுலகத்தில்
நீசர் தம், Neesar Tham - நீசராயிருப்பவருடைய
வாசல் பற்றி, Vaasal Patri - வாசலைப் பற்றி நின்று
துவள்கின்றிலேன், Thuvazhkindrileen - வருந்த மாட்டேன்