திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3794 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3794இராமாநுச நூற்றந்தாதி || 18
எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற் குலதில் வரும் சட கோபனைச் சிந்தை யுள்ளே பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம் உய்தற் குதவும் இராமானுச னெம் உறு துணையே
பதவுரை Show / Hide
எய்தற்கு அரிய மறைகளை, Eyththarku Ariya Maragalai - அதிகரிக்க முடியாத (அளவற்ற) வேதங்களை
இன் தமிழ் ஆயிரத்தால், In Tamil Aayiraththal - இனிய தமிழாவாகிய ஆயிரம் பாசுரங்களினால்
செய்தற்கு உலகில் வரும், Seiththarku Ulagil Varum - அருளிச் செய்வதற்காக  இவ்வுலகில் வந்துதித்த
சடகோபனை, Sadagopanai - நம்மாழ்வாரை
சிந்தை உள்ளே, Chinthai Ullae - தமது ஹ்ருதயத்தினுள்ளே
பெய்தற்கு இசையும், Peyththarku Isaiyum - த்யானிப்பதற்கு இணங்கின
பெரியவர், Periyavar - ஸ்ரீ மதுரகவிகளுடைய
சீரை, Seerai - ஜ்ஞாநாதி குணங்களை
உயிர்கள்  எல்லாம் உய்தற்கு உதவும், Uyirgal Ellam Uyththarku Uthavum - ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்குமாறு உபகரித்தருளா நிற்கிற
இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார்
எம் உறு துணை, Em Uru Thunai - எமக்கு உற்ற துணை