திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3794 | இராமாநுச நூற்றந்தாதி || 18 | எய்தற் கரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற் குலதில் வரும் சட கோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற் குதவும் இராமானுச னெம் உறு துணையே | பதவுரை Show / Hideஎய்தற்கு அரிய மறைகளை, Eyththarku Ariya Maragalai - அதிகரிக்க முடியாத (அளவற்ற) வேதங்களை இன் தமிழ் ஆயிரத்தால், In Tamil Aayiraththal - இனிய தமிழாவாகிய ஆயிரம் பாசுரங்களினால் செய்தற்கு உலகில் வரும், Seiththarku Ulagil Varum - அருளிச் செய்வதற்காக இவ்வுலகில் வந்துதித்த சடகோபனை, Sadagopanai - நம்மாழ்வாரை சிந்தை உள்ளே, Chinthai Ullae - தமது ஹ்ருதயத்தினுள்ளே பெய்தற்கு இசையும், Peyththarku Isaiyum - த்யானிப்பதற்கு இணங்கின பெரியவர், Periyavar - ஸ்ரீ மதுரகவிகளுடைய சீரை, Seerai - ஜ்ஞாநாதி குணங்களை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும், Uyirgal Ellam Uyththarku Uthavum - ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்குமாறு உபகரித்தருளா நிற்கிற இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானார் எம் உறு துணை, Em Uru Thunai - எமக்கு உற்ற துணை |