திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3777 | இராமாநுச நூற்றந்தாதி || 1 | பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந் துய்ந் தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராம னுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே | பதவுரை Show / Hideநெஞ்சே!, Nenje - ஓ மனமே! பூ மன்னு மாது, Poo Mannu Maathu - தாமரைப் பூவில் பொருத்த முடையளாயிருந்த பிராட்டி பொருந்திய மார்பன், Porundhiya Maarban - (அப் பூவை விட்டு வந்து) பொருந்துகைக்குறுப்பான போக்யதையை யுடைய திருமார்பை யுடையனான பெருமானுடைய புகழ் மலிந்த பா, Pugazh Malintha Paa - திருக் கல்யான குணங்கள் நிறைந்த தமிழ்ப் பாசுரங்களிலே மன்னு மாறன், Mannu Maaran - ஊற்றமுடையவரான நம்மாழ்வாருடைய அடி, Adi - திருவடிகளை பணிந்து, Panindhu - ஆச்ரயித்து உய்ந்தவன், Uyndhavan - உஜ்ஜீவித்தவரும் பல் கலையோர் தாம் மன்ன வந்த, Pal Kalaiyore Thaam Mann Vantha - ஓதின மஹான்கள் நிலை பெறும்படி (இவ் வுலகில்) வந்தவதரித்த வருமான இராமாநுசன், Iraamanausan - எம்பெருமானுடைய சரணாரவிந்தம், Saranaravindham - திருவடித் தாமரைகளை நாம் மன்னி வாழ, Naam Manni Vaazha - நாம் ஆச்ரயித்து வாழ்வதற்குறுப்பாக அவன் நாமங்களே, Avan Naamangalye - அவ் வெம்பெருமானாரது திருநாமங்களையே சொல்லுவோம், Solluvoam - ஸங்கீர்த்தநம் பண்ணுவோம் |