திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3679 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3679திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (திருவனந்தபுரத் தெம்பெருமானுடைய திருநாமமொன்றே ஸஹஸ்ர முகமான ரக்ஷயைப் பண்ணுமென்றார்.) 2
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2
பதவுரை Show / Hide
குன்று நேர் மாடம்,Kunru neer maadam - மலை போன்ற மாடங்களினருகே
எழுமையும் ஏதம் சாரா,Ezhumaiyum aedham saara - ஏழேம் பிறப்பும் ஸம்ஸார தோஷம் எட்டாது
குருந்து சேர் செருந்தி புன்னை,Kurundhu ser serundhi punai - குருந்த மரங்களோடு சேர்ந்த சுரபுன்னை மரங்களும் புன்னை மரங்களும்
மாயன் நாமம்,Maayan naamam - அத்திருப்பதி எம்பெருமானுடைய திருநாமங்களில்
ஒன்றும்,Ondrum - ஏதேனும் ஒன்றாகிலும்
மன்று அலர் பொழில் அனந்தபுரம் நகர்,Manru alar pozhil ananthapuram nagar - மன்றிலே அலறும் படியான சோலைகளையுடைய திருவனந்தபுரத்தை
ஓர் ஆயிரம் ஆகும்,Or aayiram aakum - ஒன்றே ஆயிரமாகிக் காரியஞ் செய்யும் பெருமையுடையது;
இன்று போய் புகுதிரி ஆகில்,Endru pooi pukuthiri aagil - இன்றே சென்றடைவர்களாகில்
உள்உவர்க்கு,Ulluvarkku - இத்தையநுஸந்திப்பார்க்கு
ஒம்பர் ஊரே,Ombur oorae - அத்திருவனந்புரந்தானே பரமபதமாயிருக்கும்.