திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3673 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3673திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ காரணம் ஆகையால் நம்முடைய ரக்ஷணம் தனக்கு அவர்ஜ்ஜ நீயமாம் படியான-உத்பாதகனானவனுடைய திரு மோகூரை ஆஸ்ரயிக்கவே-நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் அப்போதே கெடும் -என்கிறார்.) 7
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர் சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே–10-1-7
பதவுரை Show / Hide
வான் பெரு பாழ் தனி முதலா,Vaan peru paazh thani mudhalaa - வலிதாய் அபர்ச் சிந்தமாய் போக மோஷங்களை விளைப்பதாய் அத்விதீயமான மூலப்ரக்ருத தொடக்கமாக
அதன் வழி,Athan vazhi - அந்த வழியாலே
தொல் முனி முதலா,Thol muni mudhalaa - பழைய முனிவனான ப்ரஜாபதி முதலாக
சுற்று நீர் படைத்து,Sutru neer padaiththu - ஆவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து
முற்றும் தேவரோடு உலகு செய்வான்,Muttrum thevarodu ulagu seivaan - எல்லாத் தேவ ஜாதியோடுங் கூட எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன் எழுந்தருளியிருக்கு இடமான
நாம சுற்றி வலம் செய்ய,Naam sutri valam seiyya - நாம் சுற்றி ப்ரதக்ஷிணம் பண்ண
நம் துயர் கடிது கெடும்,Nam thuyar kadithu kedum - நம் துக்கஙகள் விரைவில் தொலைந்து போம்
திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியை
மற்று அரண் இலம்,Matru aran ilam - (ஆன பின்பு இத்திருப்பதி தவிர) மற்றொரு ரக்ஷகமுடையோ மல்லோம்.