திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3656 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3656திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (வடதளசயனனான மஹோபகாரகன் திருவடிகளிலே ப்ரேமத்தோடு பணிந்து அநவாத கைங்கரியம் பண்ணுங்கோளென்று, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற ஆச்ரயணத்தைச் சுருக்கமாகவருளிச் செய்கிறார்.) 1
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக் காலை மாலை கமல மலர் இட்டு நீர் வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1
பதவுரை Show / Hide
Velai modhum madhil sul,வேலை மோதும் மதில் சூழ் - கடலலை மோதப் பெற்ற மதிளாலே சூழப்பட்ட
Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருப்பவனும்
Aalin mel,ஆலின் மேல் - ஜலத்தின் மீது
Aal amarnthaan,ஆல் அமர்ந்தான் - ஆலிலையில் கண் வள்ர்ந்தவமான
Maalai,மாலை - ஸர்வேச்வரனை
Kanni,கண்ணி - கிட்டி
Adi inaigal,அடி இணைகள் - அவனது உபயபாதங்களையும்
Kaalai maalai,காலை மாலை - இரவும் பகலும்
Kamalam malar ittu,கமலம் மலர் இட்டு - தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து
Neer,நீர் - (அன்பர்களே!) நீங்கள்
Vinai keda,வினை கெட - (உங்களுடைய) பாவம் தொலையும்படி
Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள்