திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 36 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
36பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 14
எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர் தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச் செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-14
பதவுரை Show / Hide
ஆய்ச்சியர்,Aaychchiyar - இடைப்பெண்கள்
தொண்டை,Thondai - ‘‘கொவ்வைக்கனி போன்ற
வாய்,Vaai - அதரத்தையுடைய
எம் சிங்கம்,Em singam - எமது சிங்கக்குருவே!
வா என்று,Vaa endru - (எம்பக்கல்) வா’’ என்று
எடுத்துக் கொண்டு,Eduththuk kondu - (இடுப்பில்) எடுத்துக்கொண்டு
அம் தொண்டை,Am thondai - அழகிய கொவ்வைபோன்ற
வாய்,Vaai - (கண்ணனுடைய) அதரத்தில்
அமுது,Amudhu - (ஊறுகிற) அம்ருதத்தை
ஆதரித்து,Aadhariththu - விரும்பி,
தம்,Tham - தங்களுடைய
தொண்டை வாயால்,Thondai vaayaal - கோவை வாயை
தருக்கி,Tharukki - (கண்ணன் வாயோடே நெருக்கி)
பருகும்,Parugum - பாகம் பண்ணப்பெற்ற
இ செம் தொண்டை வாய் வந்து காணீரே,E sem thondai vaai vandhu kaaneere - இந்தச் சிவந்த கோவை வாயை வந்து காணீர்!
சேயிழையீர்! வந்து காணீரே,Seeyizhaiyeer! Vandhu kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்!