திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3528 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3528திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (எம்பெருமானது திருவருளால் நானறிந்த ஆத்ம வஸ்து வேறொருவர்க்கு மறியக் கூடியதன்று, அறிந்தாலும் ஸாக்ஷாத் கரிக்கக் கூடியதென்று என்கிறதிப்பாட்டில்.) 5
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5
பதவுரை Show / Hide
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு,Ninra onraai unarnthaanukku - நித்யமாய் ஜ்ஞாநைதஸ்வரூபமான ஆத்ம வஸ்துவை எம்பெருமான் தனக்கு ப்ரகாரமாகக் காட்டிக்கொடுக்கக் கண்ட எனக்குப்போலே
அதன் நுண் நேர்மை,Adhan nun naermai - அவ்வாத்மஸ்வரூபத்தின் ஸூக்ஷ்ம்மான வைலக்ஷணயம்
அது இது என்று,Adhu idhu endru - அப்படிப்பட்டது இப்படிப்பட்டதென்று
ஒருவர்க்கு ஒனறும் உணரல் ஆகாது உணர்த்தும்,Oruvarrkkum onrum unaral aagathu unarththum - மாஞானியர்க்கும் சிறிதும் அறியப்போகாது, வருந்தி ஒருவாறு அறிந்தாலும்
மேலும் காண்பு அரிது,Melum kaanbu aridhu - ஸாக்ஷாத்கரிக்கப்போகாது,
சென்று சென்று பரம்பரம் ஆய்,Senru senru parambaraam aay - ஒன்றுக்கொன்று மேற்பட்ட தாகி
யாதும் இன்றி தேய்ந்து அற்று,Yaadum inri theendhu aatru - அவற்றின் ஸ்வபாவம் ஒன்றுமின்றிக்கே அவற்றோடு தொற்றற்று
நன்று தீது என்று அறிவு அரிது ஆய்,Nandru theethu endru arivu aridhu aay - ப்ராக்ருதங்களுக்குண்டான நன்மை தீமைகள் அறியவரிதாய்
நன்று ஆய்,Nandru aay - ஸர்வ விலக்ஷணமாய்
ஞானம் கடந்தது,Gyaanam kadandhadhu - அவற்றைப் பற்றின ஞானத்திற்கு விஷயமன்றியே யிருந்தது.