திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 339 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
339பெரியாழ்வார் திருமொழி || இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) கலிநிலைத்துறை 2
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை எல்லா விடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டொலி செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே–4-2-2
பதவுரை Show / Hide
பல்லாண்டு ஒலி,Pallandu Oli - மங்களசான கோஷமானது
எல்லா இடத்திலும்,Ella Idathilum - எல்லா யிடங்களிலும்
எங்கும்,Engum - திருமலையின் பரப்பெங்கும்
பரந்து செல்லா நிற்கும் சீர்,Parandhu Sella Nirkum Seer - பரவிச் செல்லும் படியான பெருமையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை,Then Thirumaaliruncholai - தென் திருமாலிருஞ்சோலை
வல் ஆளன்,Val Aalan - வலிய ஆண்மையை யுடையவனும்
வாள்,Vaal - (சிவனிடத்துப் பெற்ற) வாளை யுடையவனுமான
அரக்கன்,Arakkan - ராவணனுடைய
தோளும் முடியும்,Tholum Mudiyum - தோள்களும், தலைகளும்
தங்கை,Thangai - (அவனது) தங்கையாகிய சூர்ப்பணகையினது
பொல்லாத மூக்கும்,Pollaadha Mookkum - கொடிய மூக்கும்
போக்குவித்தான்,Pookkuvithaan - அறுப்புண்டு போம்படி பண்ணின எம்பெருமான்
பொருந்தும்,Porundhum - பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடமான
மலை,Malai - திருமலையாம்.