திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3352 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3352திருவாய்மொழி || (7-2–கங்குலும் பகலும்) - ((சிந்திக்கும்) பழைய விஷயீகாரங்களை நினைக்கத் தொடங்கிவிட்டாள்; அதாவது- மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து ஸம்ஸாரிகளிலே ஒருவனாய்க் கை கழிந்து போய்க்கொண்டிருந்த வென்னை பெருங்கெழலார் தம் பெருங்கண்மலர்ப் புண்டரீகம் நம்மேலொருங்கே பிறழ வைத்தார்.) 5
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் ‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்; வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; ‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே! அலைகடல் கடைந்த ஆர் அமுதே! சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய் தானே!–7-2-5
பதவுரை Show / Hide
அந்தி போது, Andhi podhu - மாலைபொழுதிலே
அவுணன் உடல் இடந்தானே, Avunan udal idandhaane - (நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி) இரணியனது உடலைப் பிளந்தவனே!
அலை கடல் கடைந்த ஆர் அமுதே, Alai kadal kadaindha aar amudhe - அலையெறிகின்றகடலை (த்தேவர்களுக்காக)க் கடைந்தா ஆராவமுதமே!
சந்தித்து உன் சரணமே சாலீவது வலித்த தையலே மையல் செய்தானே, Sandhithu un saraname saaleevadhu valitha thaiyale maiyal seithaane - உன்னோடே கலந்து உன் திருவடிகளிலேயே லயிக்கவேணுமென்கிற திடமானஅத்யவ ஸாயங்கொண்ட இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே!
சிந்திக்கும், Sindhikkum - (ஏற்கனவே விதிவசமாக நேர்ந்திருந்த கலவியைப் பற்றிச்) சிந்தனை செய்கின்றாள்;
திசைக்கும், Thisaikkum - அறிவு அழியா நின்றாள்;
தேறும், Therum - (திடீரென்று) தெளிவு பெறுகின்றாள்
கைகூப்பும், Kaikooppum - அஞ்சலி பண்ணாநின்றாள்;
திரு அரங்கத்து உள்ளாய் என்னும், Thiru arangathu ullaai ennum - கோயிலிலே கண்வளர்ந்;தருளுமவனே! என்கிறாள்;
வந்திக்கும், Vandhikkum - தலைவணங்கா நின்றாள்;
ஆங்கே, Aange - அவ்வளவிலே
மழை கண் நீர் மல்க, Mazhai kan neer malga - கண்ணீர் தாரை தாரையாகப் பெருகநின்று
வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidaai endru endre mayangum - (எம்பெருமானே!) வாராய் வாராய் என்று பலகாலுஞ் சொல்லி (வரக்காணாது) மோஹிக்கின்றாள்.