திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3335 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3335திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அகலகில்லேன்) கீழ் ஒன்பது பாட்டாலும் சரண்யனான ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தையும் தம்முடைய ஆற்றாமையையும் சொன்னார், இப்பாட்டில், தம்முடைய அபேக்ஷிதம் சடக்கென ஆகிஞ்சந்யத்தையும் அநந்யகதித்வத்தையும் தெரிவித்துக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.) 10
அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா! நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே! நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10
பதவுரை Show / Hide
alar mel mangai,அலர் மேல் மங்கை - பூவில் வாழ்மகளான பெரிய பிராட்டியார்
iraiyum akala killeen endru,இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு
urai maarpa,உறை மார்பா - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வையுடையவனே!
nigar il pugazhai,நிகர் இல் புகழாய் - ஒப்பற்றதான புகழை யுடைய வனே!
ulagam moonru udaiyaa,உலகம் மூன்று உடையாய் - சேதநாசேதங்களுக்கும் ஸ்வாமியே!
ennai aal,என்னை ஆள் - நீசனே என்னையுமடிமை கொள்பவனே!
vaane,வானே - பவனே!
amarar,அமரர் - தேவர்களும்
muni kanangal,முனி கணங்கள் - மஹர்ஷி ஸமூஹங்களும்
virumbum,விரும்பும் - விரும்பிவந்து பணியுமிடமான
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே!
pugal ondru illa adiyen,புகல் ஒன்று இல்லா அடியேன் - அநந்யகதியான நான்
un adi keel,உன் அடி கீழ் - உனது திருவடி வாரத்திலே
amarndhu pugundhaen,அமர்ந்து புகுந்தேன் - மிகப் பொருத்தமாக அந்வயித்துவிட்டேன்