திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3252 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3252திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் கீழ்ச் சொன்ன புகர் கொள் கீர்த்தியானது புண்ய பாப அநு பந்தி பதார்த்த விபூதிகனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிர்ஹேதுக கிருபை என்கிறார்) 4
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய் எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4
பதவுரை Show / Hide
புண்ணியம்,punniyam - புண்ணியமும்
பாவம்,paavam - பாபமுமாய்
புணர்ச்சி,punarcci - சேர்க்கையும்
பிரிவு என்று இவை ஆய்,pirivu enru ivai aai - பிரிவுமாய்
எண்ணம் ஆய்,ennam aai - நினைவும்
மறப்புஆய்,marappu aai - மறதியுமாய்
உண்மை ஆய்,unmai aai - உண்மைப் பொருளும்
இன்மைஆய்,inmai aai - பொருள் இல்லாமையுமாய்
அல்லன் ஆய்,allan aai - பாப புண்யங்களை நியமிப்பவனாய்
திண்ண,thinna - உறுதியான
மாடங்கள் சூழ்,maadangal soozh - மாடங்கள் சூழ்ந்த
திருவிண்ணகர்,tiruvinnagar - திருவிண்ணகரை
சேர்ந்த பிரான்,serndha piraan - சேர்ந்த ஸ்வாமியான
கண்ணன்,kannan - கண்ணனின்
இன் அருளே,in arule - இனிய அருளே
கைதவமே,kaithavame - உய்வதற்கு வழி என்று
கண்டு கொண்மின்கள்,kandu konminkal - கண்டு கொள்ளுங்கள்