திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3228 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3228திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஆர்த்தர்களுக்கு ஆர்த்தியைப் பரிஹரித்து ரக்ஷணம் செய்வதிலேயே தீக்ஷை கொண்டிருக்கின்ற எம்பெருமான் திருவண்வண்டூரிலே வேத யொலியையும் வேள்வி யொலியையும் காதாரக் கேட்டுக்கொண்டு தன்னுடைய ஆர்த்த ரக்ஷ தீக்ஷையையும் மறந்து அங்கே தங்கிக் கிடக்கிறான், அவனுடைய பதாரவிந்தங்களிலே சென்று அஞ்சலி பண்ணி நின்று என் விஷயமாகச் சில வார்த்தைகள் சொல்ல வேணுமென்று நாரையை இரக்கிறார்.) 2
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்! வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர் நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2
பதவுரை Show / Hide
காதல்மென் பெடையோடு,Kaathalmen Pedaiyodu - காதலையே நிரூபகமாகவுடைய அழகியபேடையோடு
உடன்,Udan - கூட
மேயும்,Meyum - இரை தேர்கின்ற
கரு நாராய்,Karu Naarai - நல்லவர்ணமுடைய நாரையே!
வேதம் வேள்வி ஒலி முழங்கும்,Vedham Velvi Oli Muzhangum - வேதகோஷமும் வைதிக்கரியைகளின் கோலாஹலமும் முழங்கப் பெற்ற
தண்,Than - குளிர்ச்சி பொருந்திய
திருவண்வண்டுர்,Thiruvanvandur - திருவண்வண்டூரிலே
நாதன்,Naadhan - ஸர்வேச்வரனும்
ஞாலம் எல்லாம் உண்ட,Gnaalam Ellaam Unda - (பிரளயகாலத்தில் ஸகல ஜகத்தையும் விழுங்கினவனுமான
நம் பெருமானை,Nam Perumaanai - எம்பெருமானை
கண்டு,Kandu - நேராகக் கண்டு
பாதம் கை தொழுது,Paadham Kai Thozhudhu - அவனது திருவடிகளை நோக்கி அஞ்ஜலி பண்ணி
அடியேன் திறம்,Adiyen Thiram - அடியேன் விஷயமாக
பணியீர்,Paniyeer - ஒருவார்த்தைசொல்ல வேணும்